Friday, August 16, 2019

குறுந்தொகை குறிஞ்சித்திணை 96 வது பாடல்


பாடல் காட்சி    தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது

இயற்பழித்தல் - இயல்பைப் பழித்துக் கூறல்

தெருட்டுதல் –தேற்றுதல்

நீ தலைவனை பழித்தல் கூடாது என்று தலைவி தோழிக்கு சொல்லியது

தலைவன் விரைவில் வரையாமல் ஒழுகினானாக அவன் வரைதல் வேண்டிய தோழி, “தலைவன் நம் நிலையை அறியானாயினன்; அவன் திறத்து என்செய்வேன்!

இப்படலை எழுதியவர் : அள்ளூர் நன்முல்லை  , இவர் சங்ககால பெண் புலவர்,   , நன்முல்லை - இவரது பெயர்  , அள்ளூர் - ஊரின் பெயர்

இவர்  அகநானூற்றில் ஒரு பாடல்(பாடல்:46), புறநானூற்றில் ஒரு பாடல் (பாடல்:306)[1] மற்றும் குறுந்தொகையில் ஒன்பது பாடல்கள் பாடல் எண்கள் 32, 67,68,93,96,140,157,202,237[2] என  மொத்தம் பதினொன்று பாடல்கள் பாடியுள்ளார்

விளக்கம்

அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது
நகை என உணரேன்ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,

நல் நுதல் நீயே - நல்ல நெற்றியை உடைய நீ

அருவி வேங்கை - அருவியினதருகில் வளர்ந்த வேங்கை மரங்களையுடைய

பெரு மலை நாடற்கு - பெரிய மலையையுடைய நாட்டுக்குரிய தலைவனுக்கு

யான் எவன் செய்கோ?' என்றி - நான் என்ன செய்வேன், - என்று கூறி அவனை இயற்பழித்தாய்

யான் அது
நகை என உணரேன்ஆயின்,  - நான் அதை விளையாட்டுனு தெரியாம இருந்திருந்தா

என் ஆகுவைகொல்?- என்ன ஆவ சொல்லு

தலைவனை வெச்சுட்டு என்ன செய்யுறது , ரொம்ப மக்கா இருக்கானு தோழி சொல்லிட்டாப்பல ,   நீ சொன்னதை நான் சீரியஸா எடுத்துகிட்டானா நீ என்ன அவ சொல்லுனு கேட்குற பாட்டு தான் இது         

மறுபடியும் பாட்டு

அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது
நகை என உணரேன்ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,


No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...