Tuesday, November 28, 2023

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவராக  இருந்தார். அதுமட்டுமில்லாமல்  Daily Journal நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார் .costco வின் Board member களில் ஒருவர்.  ஜனவரி 1 100 வயதை நெருங்க இருந்த நிலையில் இன்று  மறைந்தார்.  

கடினமான வாழ்க்கை இவருடையது. தன் முதல் மகனை நோய்க்க பறிகொடுத்தார், மனைவியும் விவாகரத்து செய்து விட, கண் அறுவை சிகிச்சை தவறானதால் ஒரு கண்ணையும் இழந்தார் . இத்தனை இழப்புகளை தாண்டி ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார், நமது மிசிகன் UOM ல் கணிதம் படித்தார், பின் கட்டிடக்கலையில் ஆர்வம் கொண்டு ஹார்வேர்ட் பல்கலைகழகத்திற்கு உறைவிடங்களை கட்டினார்.


தனது நண்பர்  Warren buffet டுடன் சேர்ந்து இவர் கட்டி எழுப்பிய பிரம்மாண்டம் தான் Berkshire Hathway . இந்த நிறுவனம் தடம் பதிக்காத தொழில்கள் மிகக் குறைவு. தனது முதலீடுகளை தனக்காக அன்று நிறுத்திக்கொள்ளாமல் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு இலவசமாக  சொல்லிக் கொடுத்தார் . இவரைப் பற்றிய புத்தகங்களே ஆயிரக்கணக்கில் உள்ளன. 


 வாழ்க்கையை பற்றிய இவரது தத்துவங்கள் மகத்தானவை . இவர் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய ஜந்து பெரும் உரைகள் Poor charlie Almanac என்ற பெயரில் புத்தகமாக உள்ளது. இது ஒருமுறையாவது படிக்க வேண்டிய ஒன்று. தனது முதலீட்டு கொள்கையிலும் , வாழ்க்கையிலும் எந்த சமரசங்களும் செய்து கொள்ளாதவர் .இவர் வாழ்க்கை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம். 


அவர் உதிர்த்த முத்துக்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்  எனக்கு பிடித்தவை சில.


Warren Buffett முதலீட்டாளர்களின் கேள்விக்கு பக்கம் பக்கமாக பதில் சொல்லிவிட்டு  சார்லி என்று இவரது பதிலுக்கு அழைப்பார் .


இவரோ தன் முன்னால் இருக்கும் சாக்லெட்களையும் , cocal cola வையும் ஒரு நன்றாக சாப்பிட்டுக்கொண்டே " I have nothing to add "  என்பார் . பல லட்சக்கணக்கான பேர் பார்க்கும் அரங்கில் அலட்டிக்கொள்ளாமல் கூறும் தைரியம் சார்லிக்கே உரித்தானது.

எப்போது பேச வேண்டும் என்பதைவிட எப்போது பேசாமல் இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தவர் சார்லி.


தங்களுக்கள் முதலீடு சம்மந்தமான விவாதங்களில் Buffet ற்கூ , இவர் சொல்வாராம் . " warren i am right and you are smart .think you will understand"


"For a man with a hammer every problem looks like a nail "


" It takes character to sit with all the cash and do nothing "


" I have the simple rule of  success in fishing  .fish where the fish are "


" I am personally skeptical of the hype that has gone in to artificial intelligence .I think old-fashioned intelligence works pretty well"


தனக்க முன்னால் கேள்வி  கேட்கப்படும் கேள்விகளுக்க அது எவ்வளவு பெரிய ஆள் கேட்டாலும் , எங்கு கேட்டாலும் , தவறு என்றால் இது  முட்டாள்தனமான கேள்வி என்று சொல்லும் துணிச்சல் தான்  சார்லி  . இறுதிவரை அப்படியே இருந்தார்


உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் இவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள். 


அதில் சார்லியின் பார்வையில் முட்டாளாகிய நானும் ஒருவன் " Miss you charlie "

Sunday, November 26, 2023

நினைவோ ஒரு பறவை

 மிசிகனி்ல்  இருந்து வரும் கழல்கள் குழுமத்தில் இன்று(Nov 26 2023) நண்பர் தமிழில் புள்ளி வைத்த எழுத்து வராத வார்த்தைகளில் உங்களுக்கு பிடித்த வார்த்தை என்ன என்ற கேள்வியை  எழுப்பினார், 100 க்கும் மேல் பதில்கள் வந்து விழுந்தன , அந்த கேள்வியை சற்று விரிவாக்கி புள்ளி இல்லாத  வார்த்தைகளை கொண்டு எழுதிய கவிதை . ஒற்று இல்லாத வார்த்தை முற்றுப் பொறாது என்பார்கள் . இது ஒரு சிறிய முயற்சி


அலையாட மேலே படகாட

படகோடு துணையாக வலையோசை

வலையோசை கூடவே

கொலுசு மணி

முழு நிலவு  மேகமோடு

கவிபாட

நறுமுகை 

முகமோடு

மதி போக

மதி போன

பாதையோடு

மனகுதிரை

சதிராடி

உறவான

பொழுதுகளை

நினைவோடு

அசைபோட

மனதோடு

வருகிறதே

ஒரு கவிதை



பாவி

Friday, April 7, 2023

Richest man in Babylon -பாபிலோனின் பெரும்செல்வந்தன்

 கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு  முன் (1926 ம் ஆண்டு )  Geroge Samuel Johnson  என்பவரால் எழுதப்பட்டது  " Richest Man  in Babylon "  என்ற இந்த சிறிய புத்தகம் . புத்தகம் சிறிதானாலும் இதில்  உள்ள கருத்துக்களுக்காக  உலகம் முழுவதும்   தனி மனித நிதி மேலாண்மைக்கும் , திட்டமிடலுக்கும்  மிகச் சிறந்த புத்தகமாக  இது  பொருளாதார வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது .


அப்படி என்ன சிறப்பு என்பதை தெரிந்துகொள்வதற்கு  , ஏறத்தாழ 8000  ஆண்டுகளுக்கு முன் இருந்த பாபிலோன் நகரத்துக்கு நாம் செல்ல வேண்டும் (இன்றைய இராக் தலைநகர் பாக்தாத்  நகருக்கு அருகில் உள்ள   "ஹில்லா " , அன்றைய பாபிலோன்  ) . பாபிலோனின்  தொங்கும்தோட்டம் நாம் அறிந்ததே ,  தோட்டம் மட்டும் இல்லை , வானவியல் , அறிவியல் , கட்டிடக்கலை , பாலைவனத்தில் விவசாயம் ,முக்கியமாக செல்வம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய நகரம் பாபிலோன் .


இத்தனைக்கும் பூகோள ரீதியாகவோ , அரசியல் ரீதியாகவோ , மண்வளத்திலோ , வணிகரீதியாகவோ  சிறப்பு பெற்ற நகரம் இல்லை அது , ஆனாலும் செல்வத்தில் கொழித்த நகரம் , எப்படி இது சாத்தியமானது ?  ஏன் எனில் , பணத்தை கையாள்வதில் அந்த நகரத்து மக்கள் சிறந்தவர்களாக இருந்துள்ளனர் , பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது , என்ன சொன்னார்கள் என்பதையும் காகிதம் கண்டுபிடிப்பதற்கு  முன்னே  களிமண் தட்டிகளில் எழுதி நூலகமாக வைத்துள்ளனர் . அகழ்வாராய்ச்சியில்  ஆயிரக்கணக்கான எழுதப்பட்ட  தட்டிகள் எடுக்கப்பட்டு , அதில்  இருந்ததை தொகுத்துள்ளதாக  கூறுகிறார் நூலாசிரியர் .


பாபிலோனில் உள்ள இரண்டு  நண்பர்கள்  என்ன செய்தாலும் , எவ்வளவு உழைத்தாலும் பணம் நமக்கு தங்குவது இல்லையே என அவர்களுக்குள் புலம்புகிறார்கள் ,   பணம் கையில் தங்குவதற்கு என்ன ரகசியம்  என தெரிந்துகொள்ள  கிளம்புகிறார்கள்


இன்னொரு புறம்  பாபிலோனின் அரசன் , மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று  அமைச்சரவையில் விசாரிக்க , மக்களிடம் பணம் இல்லை என்று பதில் வருகிறது , அரசனுக்கோ அதிர்ச்சி  ,சிறிது காலம் முன்புதான் மிகப் பெரிய பொருட்ச்செலவில்  அன்றைய உலகின் உயரமான மதில் சுவரை கட்டி முடித்திருந்தான் (நகரத்தை சுற்றி 140  அடி சுற்றுச்சுவர் ) , இதன் மூலமான வேலை வாய்ப்பு , பணப்புழக்கம் என  மக்களிடம் பணம் இருக்க வேண்டுமே ஏன் இல்லை என்று  கேட்கிறான் .


மக்கள் வந்த பணத்தை  செலவழித்து விட்டார்கள் , அவர்களுக்கு சேமிக்க தெரியவில்லை என்று பதில் வருகிறது .


புத்திசாலி அரசனின் அடுத்ததாக  , யார் இந்த நகரத்தின் பெரிய செல்வந்தன் நம் ஆர்கத் (Arkad ) தானே எனக் கேட்கிறான் ,ஆம் என்று அமைச்சர்கள் சொல்ல , முதற்கட்டமாக   நம் மக்கள்  நூறு பேரை தேர்ந்தெடுங்கள்,  பணத்தை எவ்வாறு கையாளுவது என்பதை பற்றி  ஆர்கத்தை படம் எடுக்க சொல்லலாம் , அவன் புத்திசாலி தனக்கு தெரிந்ததை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பான் என முடிவு செய்கிறான் ,


நாம் முன்பு  விட்டுவிட நண்பர்களும் , அவர்களுடைய  சிறு வயது நண்பன் , இப்போதைய பெரும் பணக்காரன் ஆர்கத்தை தேடித்தான் வருகிறார்கள் .


 அன்றைய பாபிலோனின்  பெரும் செல்வந்தனாக இருந்த ஆர்கத்  மீது அரசன் முதல் , ஆண்டி  வரை அனைவருக்கும்  மிக ஆச்சிரியம் , ஆர்கத் செல்வ குடும்பத்தில் பிறக்கவில்லை , நூலகத்தில் மண்  தட்டிகளை செய்யும் வேலை தான் செய்தான் , அதில் அப்படி ஒன்றும்  பெரிய வருமானம் இல்லை , மிகவும் நாணயமானவனும் கூட , எப்படி பொருள் சேர்த்தான் ?


அர்க்கத் அரசன் சொன்னபடி , 100  பேரை அழைத்து , நண்பர்களே  பணம் சேர்ப்பது ஒன்றும் , ரகசியமோ , பெரிய சாதனையோ  இல்லை ,  எனக்கு என்ன செய்வது என்று , பசீர் என்ற  முதியவர் சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன் , அவரும் பெரிய செல்வந்தர் , நூலகத்திற்கு வந்த அவரிடம் நான் எப்படி பணம் சேர்ப்பது என்று கேட்க மூன்று ஆண்டுகள் சொல்லி கொடுத்தார் , நான் அவற்றை உங்களுக்கு சொல்கிறேன் என தனது பாடத்தை ஆரம்பிக்கிறான்


அர்க்கத் பெரும்பாலும் நம்மிடம் இருக்கும்  ஒல்லியான பணப்பையை குண்டாக்க சொன்ன ஏழு  வழிகள்(இவற்றை கதைகளாக விரிவாக சொல்கிறார் , இந்த கட்டுரை புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இல்லை , சுருக்கம் என்பதால் , சுருங்கிவிட்டது )


 >சம்பாதித்த பணத்தில் 10 சதவீதமாவது சேமியுங்கள் .

>செலவழிப்பதை கட்டுப்படுத்துங்கள்

> சேர்த்ததை பெருக்குவதற்கு வழி செய்யுங்கள் (வட்டி குட்டி போடும் , குட்டி வட்டி போடும் , குட்டி மறுபடியும் குட்டி போடும் , அது வட்டி போடும் , குட்டி ... வேண்டாம்  முதல் குட்டியில் அனைவருக்கும் புரிந்திருக்கும் )

> சேர்த்த பணத்தை  இழக்காதீர்கள் (  நம்ம "warren buffet "  தாத்தாவும் இதைத்தான் சொல்கிறார்  "Never lose your  money " )


> உங்களுக்கு சொந்தமாக ஒரு வீட்டை வைத்துக்கொள்ளுங்கள் , அது தரும் நம்பிக்கை அலாதியானது

> எதிர்கால வாழ்விற்கும் , ஓய்வுக்கும் பணம் தொடர்ந்து வருவதற்கு வழி செய்யங்கள்

> வருமானத்தை பெருக்குங்கள் .


அர்க்கத் சொன்னதை மக்கள் கடைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள் , சிறிது காலம் சென்று , அர்க்கத்தின் மகன்  தனியாக தொழில் தொடங்க வேறு நகரத்துக்கு சென்று , ஒன்றை பத்து ஆக்குகிறேன் என முதலீடு செய்து ( இன்றைய  BITCOIN  போல )  அனைத்தும் தொலைத்து நிற்கையில்  , தனது அப்பா தங்கத்தை ஈர்க்க சொல்லிக் கொடுத்த வழிகளை எண்ணிப்  பார்க்கிறான் , அதனை கடைபிடித்து மீண்டு வந்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறான் , அந்தப்  பாடம் (தங்கத்திற்கு பதில் பணமாக நாம் வைத்துக் கொள்ளலாம் )



> தனது  வருமானத்தில் 10 % சேமிப்பவன் கையில் தங்கம் சேரும்

> கையில் உள்ள தங்கத்தை , தனக்காக   வேலை வாங்க தெரியும்  புத்திசாலியிடம் தங்கம் சேரும்

>பொறுமையாக , நீண்டகாலத்திற்கு , எச்சரிக்கையாக முதலீடு செய்பவனிடம் தங்கம் சேரும்

>தெரியாததை  செய்தால் தங்கம் ஓடிவிடும்  தனக்கு தெரிந்த முதலீட்டை செய்பவனிடம் தங்கம் சேரும் ( youtube இல் சொன்னதை கேட்டு பங்கு வாங்காதீங்க ,படித்து தெரிந்து கொண்டு முதலீடு  செய்யுங்க என படிக்கவும் )

> ஒரு ரூபாய் போட்டால் நூறு ரூபாய் எடுக்கலாம் என  முதலீடு  செய்தால்  தங்கம் கையை விட்டு ஓடி விடும் (quest coin , ஈமு கோழி , ஒரு லட்சத்திற்கு மாதம் பத்து சதவீத வட்டி பங்குச்  சந்தையில்  சம்பாதித்து கொடுக்கிறோம் போன்றவைகள் )


பின் பாபிலோனில் காலம் செல்கிறது , மக்கள் பணத்தை  கையாள்வதில் புத்திசாலிகளாக மாறுகிறார்கள் , அவர்களில்  இருந்து  தங்கத்தை வட்டிக்கு விடும் ஒருவர் ,  "ஐயோ போச்சே!!! என புலம்புவதை விட  ,பணத்தில்  ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது "  என தன் அனுபவங்களை  சொல்கிறார் .



பாபிலோனின் 140 அடி சுவர் எப்படியெல்லாம் எதிரிகளிடமிருந்து மக்களை காத்ததோ அதுபோல நாம் நம்மை சுற்றி  நமது முதலீடுகளின் மூலம் ஒரு சுவரை கட்டி காத்துக்கொள்ளவேண்டும் என்று விளக்கப்படுகிறது .


நல்ல குடும்பத்தில் பிறந்து , பணத்தை தவறாக கையாண்டதால்  அடிமையாக விற்கப்பட்டு , தன் உறுதியான நிலைப்பாட்டால் , கடனை அடைத்து , சுதந்திர மனிதனான ஒட்டக வியாபாரியின் கதை நமக்கு சொல்லப்படுகிறது  ( கடன் இருந்தால்  வருமானத்தில்  20 % கடனை அடைக்க முதலில் எடுத்து வையுங்கள் , பட்டினி கிடந்தாலும் 70 % பணத்தில் வாழுங்கள் , 10 % சேமியுங்கள் )


இதனோடு புத்தகம் முடிகிறது ,  பணம் , பணத்தை கையாள்வது எப்படி , எவ்வாறு  முதலீடு செய்வது என எந்தப்  பள்ளியும் , கல்லூரிகளும் , தொழில் படிப்புகளும் , நாம் வேலை செய்யும் நிறுவனுங்களும் , நமக்கு சொல்லிக்  கொடுப்பதில்லை , பணம் இருப்பவன் தொடர்ந்து பணக்காரன் ஆகிறான் , ஏழை மாடு  மாதிரி உழைத்தாலும்  மேலும் ஏழை ஆகிறான் , உலகம் முழுவதும் இதே   நிலைமை தான் . நமக்கு சொல்லி கொடுப்பதற்கு இந்த மாதிரி அரிதாக சில புத்தகங்களே உள்ளன


பொருளாதார மந்த நிலை வரும் என்று உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும்  இந்த சூழ்நிலையில் , இம்மாதிரி புத்தகங்களை படித்து நம்மையும் , நமது குடும்பத்தையும் ஓரளவேனும் காத்துக் கொள்வது நல்லது,  இல்லையென்றால் இருக்கவே இருக்கு   " YOLO  வழி " .

Tuesday, February 14, 2023

காதலாகி பாத்திரம் கழுவி!

 சண்டையிட்டு
 சமாதானாம் அடைந்து 
 சமாதானத்தில் ஒரு 
 சண்டையிட்டு 
 இப்போது 
 சண்டையிலா
 சமாதானத்திலா? 

 "லூசு மாதிரி எப்ப பார்த்தாலும் கிறுக்கிட்டு இருக்காம வந்து பாத்திரம் கழுவி தாங்க"

 ரைட்டு!!!! 

 அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துகள்.

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...