Thursday, July 5, 2018

உயிராயுதம் - பெட்னா 2018 விழா மலரில் வெளிவந்த கதை !!!





F
Fetna malar 2018:
https://issuu.com/fetna/docs/fetna-malar-2018


காலம் :  கி.பி  பதினெட்டாம் நூற்றாண்டு                                                          களம்: சிவகங்கை    

சிவகங்கை சீமையை ஆண்டு வந்த மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேய அரசாங்கத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார் . கணவனின் கொலைக்கு பழி தீர்க்கப் புறப்பட்ட வேலு நாச்சியார் கடுமையான போரில் தோற்க்கடிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் தலை மறைவு வாழ்கை வாழ்ந்து   கொண்டிருந்தார் .

இங்குதான் காலம் வேலு நாச்சியாரையும் , அவர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குயிலியையும் இணைக்கிறது. பதினெட்டு அகவை மட்டுமே கொண்ட குயிலிக்கு வேலு நாச்சியார் மேல் மிகுந்த மரியாதை.

வேலு நாச்சியாரின் சிலம்பு வாத்தியாராக இருந்த வெற்றிவேல் , அவர்    ஆங்கிலேயருக்கு உளவாளி என்று 
 அவர் எழுதிய கடிதத்தின் மூலம்  அறிந்த குயிலி அவரை கொன்று தன் முத்திரையை அழுத்தமாக வரலாற்றில் பதிக்க ஆரம்பிக்கிறார் .

தன் மீது பற்று கொண்டு கொலையும் செய்யத்துணிந்த   குயிலியை  ராணி தன் மெய்க்காப்பாளராக நியமித்துக் கொண்டார் . 

 தனது பணியில்  விழிப்புடன் இருந்த குயிலி  சிறிது காலத்தில்  ராணி உறங்கி கொண்டிருக்கும் போது நடைபெற்ற கொலை முயற்ச்சியை வெற்றிகரமாக முறியடிப்பதின் மூலம்  பெண்களை மட்டுமே கொண்டு இயங்கும் உடையாள்  படைப்பிரிவுக்கு தளபதியாகவும் நியமிக்கப்படுகிறார் .

திப்பு சுல்தான் மூலமாக ஆயுதங்கள் வந்து சேர 1780  களில் பழிதீர்க்கப் புறப்பட்டது வேலு நாச்சியாரின் படை . மூன்றாக பிரிக்கப்பட்ட அவரது படைக்கு தலைமை தாங்கியவர்கள் பெரிய மருது , அவரது தம்பி சின்ன மருது , ராணியின் பெண்கள் படை தளபதி குயிலி .  மதுரை கோச்சடையில் ஆரம்பித்த முதல் போரிலேயே அவரின் படை மகத்தான வெற்றி பெறுகிறது . 

தொடர்ந்து  ஆங்கிலேயர் படையை , காளையார்கோயில்  போரிலும் வெற்றிகொண்டார் .

இறுதி போர்  சிவகங்கையில் . கோட்டையை கைப்பற்றுவதில் இருந்தது வெற்றி . 

வேலு நாச்சியாருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது சிவகங்கை கோட்டையில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் . வெற்றி அல்லது வீர மரணம்  என்று அவர் படை போரிட்டாலும் , குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்  பின்னதையே தரும் என்ற நிலை.  

 போர் வியூகங்கள் வகுக்கப் பட்டன . திருப்பத்தூரை தோற்கடித்தது சின்ன  மருதுவின் படை சிவகங்கை நோக்கி வருவது , இன்னொரு படை பெரிய மருதுவின் தலைமையில் அரண்மனையின் வெளிப்புறம் தாக்குவது . எனினும் கோட்டைக்குள் எப்படிப் போவது ?    அதற்கான வழியை  மாறுவேடமிற்று   உளவறிந்து சொன்னார் குயிலி .

ஆரம்பம் ஆகிற்று இறுதிப்போர் . கோட்டையில் இருந்த அம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த கொலுவை   பார்ப்பதற்கு பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் . அவர்களுடன் பூச்சரங்களுக்குள் வாளினை வைத்து ஊடேறியது ராணியின் பெண்கள் படை . 

 .ஆம்  சுதந்திர போராட்டத்தின் முதல் தற்கொலை போராளி ஒரு  பெண் .  குயிலி போன்ற முகம் அறியாதவர்கள் தங்களது உயிரை ஆயுதமாக்கி பெற்றுக்கொடுத்ததுதான் சுதந்திர இந்தியா .
 எப்பொழுதும் வெற்றி பெற்றவர்களின் பார்வையில் இருந்து தான்  சரித்திரம் எழுதப்பட்டுள்ளது .  குயிலியைப் பற்றி நம்ம தெரிந்துகொள்ள விரிவான வரலாற்று   நூல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை , 2010  முதல்தான் அங்கங்கே எழுதப்பட்ட கட்டுரைகள் மூலம் அவர் பார்வைக்கு வருகிறார் . அதற்கு முன் நாட்டுப்புற பாடல்களில் மட்டுமே அவர் வரலாறு அறியப்படுகிறது .  மேலே எழுதியது கூட  இணையத்தில் இருந்ததை திரட்டி எழுதியதே தவிர விரிவான , ஆழமான வரலாறு இல்லை .

யாரும் செய்ய துணியாத அருஞ்செயல்களை செய்தாலும்  ஏன் குயிலியின் வீரமும் , தியாகமும் பாடமாகாமல் அறியப்படாமல் போயிற்று ? 

சோழ சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தினாலும் ஏன் ராஜேந்திரனை விட ராஜராஜன் கொண்டாடப்படுகிறார் ?  

 கி பி 3 ம் நூற்றாண்டு முதல் , கி பி 6  ம் நூற்றாண்டு வரை , திருக்குறள் முதலான செறிவான இலக்கியங்களை தந்த ஒரு காலகட்டத்தை  ஏன் இருண்ட  காலம் என்று மட்டுமே படிக்கிறோம் ? 

இந்தக் கேள்விகளுக்கான பதிலில் உள்ளது இன்னமும் எழுதப்படாத தமிழகத்தின் சரித்திரம் .

Sunday, July 1, 2018

தமிழிசை அறிஞர் மம்மது அவர்களுடனான நேர்காணல் - Fetna2018 அமெரிக்கா தமிழ் வானொலி





வட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவையின் 31 வது விழாவிற்கு வருகை தந்திருக்கும் தமிழிசை அறிஞர் திரு மம்மது அவர்களை , அமெரிக்கத் தமிழ் வானொலியின் சார்பில்  எடுத்த நேர்காணல்.  

http://americantamilradio.com/archive  

http://hwcdn.libsyn.com/p/3/8/e/38e4522199aceec1/ATR_Interview_FeTNA_Guest_Ayya_Mammadu_2018-0601.mp3?c_id=21689357&cs_id=21689357&expiration=1530482595&hwt=184fc9045f1912bafaf7fb59ec747cd3




மம்மது அய்யா அவர்களின் நேர்காணல் மிக்க குறைந்த அளவே உள்ளது , நான் தேடிய வகையில் ஜெயமோகன் அவர்கள் எடுத்த ஒரு நேர்காணல் உள்ளது .  

அதலாலியே இதனை   ஆவணப்படுத்தல் முக்கியம் என நினைக்கிறேன் .  மம்மது அவர்களுடன் உரையாடியது  மிக்க மகிழ்ச்சி 


நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...