Sunday, February 10, 2019

மிச்சிகன் ரோசெஸ்டர் நகரில் நடந்த பட்டிமன்றம்



அமெரிக்கா வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது ஆண்களா ? இல்லை பெண்களா ? என்ற தலைப்பில் மிச்சிகனில் நடந்த நகைச்சுவை பட்டிமன்றம் .



https://www.youtube.com/watch?v=hoNGnjuXX8w&feature=youtu.be

Thursday, February 7, 2019

காதல் கற்பனைகள் -3

பதினெட்டு வருடங்களுக்கு முன் எழுதிய கவிதைகள் சில இன்று கண்ணில் பட்டது . 12 ம் வகுப்பு விடுமுறையில் , கவிதை எழுதி பழகி கொண்டிருக்கும் பொழுது எழுதியவை . முதன் முதலில் கவிதை எழுதும் ஒருவனுக்கு காதலை தவிர வேறு என்ன எழுத தோன்றும் ? எழுதியது அனைத்தும் காதல் கவிதைகளே . ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்ததால் அனைத்தும் வெறும் கற்பனையே . நமது வாழ்வில் தான் காதல் என்ற அசம்பாவிதம் நடக்கவே இல்லையே . காதலர் தினம் அருகில் வருவதால் சரியாக இருக்கும் என மறுபடியும் , கந்தலாகி போன காகிதங்களில் இருந்து .

கதிரவன்
மலை காதலியை
விட்டுப் பிரியும்
காலை நேரத்தில்
துடைத்து வைத்த
குத்து விளக்காய்
 ஈரக்   கூந்தல்
நடைக்கேற்ப
தாளம்    போட
கண்மணி நீ
அன்று  வந்தாய்
குழாயடி நீர்
பிடிக்க !!

கண்களில் தூக்கம்
மிச்சமிருக்க
கலைந்த கேசத்துடன்
வீட்டிலிருந்து
உனை பார்த்தேன்
போன தூக்கம்
திரும்பவில்லை
இன்று வரை !

உன்னை தொடர
முற்பட்டேன்
வழிமறித்தனர்
நண்பர்கள் சிலர்
இன்று
அவர்கள் முறையாம் !!

தினந்தோறும் முறை
வைத்து
பலர் உன்னை
சுற்றுவதை
பின்னர் நான்
 அறிந்தேன் .

நெருங்க கூட
முடியாது என
திரும்பிவிட
வாய்ப்பு வந்தது
பட்டிமன்றங்களில் !!!

எப்போதும் அவள்
எதிரணிதான்!

ஆலமரத்தின்
அடிவிழுதான
நடுவர் அவர்களே
என்பதெல்லாம்
அவள்
அருகில்
வரும்போது
 மறக்க
அசட்டுச் சிரிப்புடன்
பார்த்துக்கொண்டே
ஓடிவிடும் பொழுதுகளை
நாடி மட்டுமே
இருந்தது வாழ்கை !!

என்ன நினைத்தாயோ
தெரியவில்லை
பட்டிமன்ற போட்டி
ஒன்றில்  பேச
போகும் முன்
லூசு உன்னை
லவ் பண்ணுகிறேன்
என்றாய்

தலைப்பு மறந்து
கூடி இருந்த
அனைவருக்கும்
என் காதலை
சொல்லிவிட்டு
நடுவருக்கு
முத்தம் கொடுக்கச்
சென்ற என்னை
இழுத்துப் போயினர்
நண்பர்கள்

பிறகு
நாம் சந்தித்த போது
பேசவில்லை
பேசவும்
நேரமில்லை

   -பாவி 

காதல் கற்பனைகள் -2

பதினெட்டு வருடங்களுக்கு முன் எழுதிய கவிதைகள் சில இன்று கண்ணில் பட்டது . 12 ம் வகுப்பு விடுமுறையில் , கவிதை எழுதி பழகி கொண்டிருக்கும் பொழுது எழுதியவை . முதன் முதலில் கவிதை எழுதும் ஒருவனுக்கு காதலை தவிர வேறு என்ன எழுத தோன்றும் ? எழுதியது அனைத்தும் காதல் கவிதைகளே . ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்ததால் அனைத்தும் வெறும் கற்பனையே . நமது வாழ்வில் தான் காதல் என்ற அசம்பாவிதம் நடக்கவே இல்லையே . காதலர் தினம் அருகில் வருவதால் சரியாக இருக்கும் என மறுபடியும் , கந்தலாகி போன காகிதங்களில் இருந்து . 

ஆண்டுதோறும் விடுமுறைக்கு 
கிராமம் செல்வோம் ! 
வயல் வரப்புகளில் 
ஆடி ஓடி 
திருட்டு மாங்காய் 
அடித்துத் தின்று 
ஆலமரத்தில் உஞ்சல் 
கட்டி 
அற்று நீரில் 
ஊரிக் கிடந்து 
விடுமுறையை கழிப்போம் 
நண்பர்கள் நாங்கள் !! 

பருவம் வந்து 
நலம் விசாரித்ததில் 
மற்றம் கண்ட 
மனநிலையில் 
பெண்கள் எங்கள் 
கவனம் ஈர்க்க 
சுற்றி ஊருக்குள் 
திரிகையில் ! 

நீராடிக் களைத்துப்போய் 
இருளில் முழுமதியாய் 
கூந்தல் நடுவே 
உன் முகம் ! 

பருவம் விசாரிக்கவில்லை 
பந்தி போட்டு 
பாய் விரித்து 
குடி இருந்தது 
உன்னில் ! 

விரும்பி மீறி 
பார்த்துக்கொண்டே 
இருக்கையில் 
முறைத்தபடி 
மறைந்தாய்!! 


ஊரின் சிறப்பு 
விடுமுறையில் திருவிழா ! 
கரகம் , சிலம்பம் 
ஒயில் , கூத்து 
பலவும் நடக்கையில் 
உன்னை பார்த்து 
விட்டால் 
உன் கண்களில் நடக்கும் 
கரகம் , சிலம்பம் 
ஒயில் , கூத்து 

அதிர்ஷ்டம் வருகிறதென 
கடைக்குள் அழைக்க 
ஒரு போட்டியே 
நடக்கும் 
அதிர்ஷ்டம் வரவேண்டுமென 
பின் தொடரும் நான் ! 

விடுமுறைகள் பல 
கடந்து விட்டன 
கிராமம் செல்வது 
நிற்கவில்லை 
ஆச்சிரியப்பட்டனர் 
நண்பர்கள் 
ஊர் பாசமென 
எனக்குத்தானே தெரியும் 
உன் பாசமென 

தேடியபடி செல்கையில் 
வரப்பில் எதிரில் 
நீ ! 


விலகி வழிவிட்டு 
தலைகுனிந்து 
உன் கால்கள் 
என்னை கடக்கும் 
எனப் பார்க்கையில் 
அசையாமல் இருந்தது 
கால்கள் ! 

ஓர் பக்கம் 
தலை சாய்த்து 
கைகளை கட்டிக்கொண்டு 
கோவமாய் அவள் ! 

என்ன செய்வதாய் 
உத்தேசம் ? 
வேகமாய் வந்தன 
வார்த்தைகள் !! 

காற்று மண்டலம் 
கற்கண்டு மண்டலமாக 
நீ எனக்கு மட்டும்தான் 
என்று 
பொரிந்து விட்டு 
மறைந்து போனாள்!! 

காரணம் புரியாமல் 
தனியாக வெட்கப்பட்டுக்கொண்டு 
நான் !! 

- பாவி

காதல் கற்பனைகள் -1

பதினெட்டு வருடங்களுக்கு முன் எழுதிய கவிதைகள் சில இன்று கண்ணில் பட்டது . 12 ம் வகுப்பு விடுமுறையில் , கவிதை எழுதி பழகி கொண்டிருக்கும் பொழுது எழுதியவை . முதன் முதலில் கவிதை எழுதும் ஒருவனுக்கு காதலை தவிர வேறு என்ன எழுத தோன்றும் ? எழுதியது அனைத்தும் காதல் கவிதைகளே . ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்ததால் அனைத்தும் வெறும் கற்பனையே . நமது வாழ்வில் தான் காதல் என்ற அசம்பாவிதம் நடக்கவே இல்லையே . காதலர் தினம் அருகில் வருவதால் சரியாக இருக்கும் என மறுபடியும் , கந்தலாகி போன காகிதங்களில் இருந்து . 


இதய வானின் 
உடைய நிலாவே 
நிதமும் சந்திக்கிறோம் 
பேசிப் பிரிக்கிறோம் 
காதலை சொல்லாமலே ! 

இயல்பாக காட்டிக் 
கொண்டாலும் 
நீ எனது 
உடலின் ஒரு 
பகுதியாய் 
மாறிப் போனதை 
அறிவாயா ? 

அருகில் வரும்போதும் 
விகல்பமின்றி தொடும்போதும் 
சிறப்புகளை பாராட்டும்போதும் 
தவறுகளை கூறும்போதும் 
செல்லமாக அடிக்கும்போதும் 
என்னவாயிற்று 
அமைதியாய் இருக்கிறாய் 
என்கிறாய் ? 

எப்படி சொல்வது 
நினைவுச் சூழலால் 
தடுமாறி 
நிற்கிறேன் 
என்பதை ? 

என்ன வாங்கினாலும் 
பிடித்திருக்கிறதா 
என் என்னை 
கேட்டு வாங்குகிறாய்? 

எனக்கு பிடித்த 
உன்னை நான் 
வாங்குவது 
எங்கனம் ! 

உடைகள் விஷயத்தில் 
தினமும் 
எனது கருத்தை 
கேட்கும் நீ 
உடமையாக்கிக் கொள்ள 
ஒத்துக்கொள்வாயா ? 

காதலுக்கும் நட்புக்கும் 
ஒரு நூல் 
அளவே 
இடைவெளி 
நான் தாண்டிவிட்டேன் 
நீ ?? 

-பாவி

Wednesday, February 6, 2019

சும்மாடு !!!




கருவேலங் காட்டிலும்
பாதை ஒன்று
தெரியுதடா !!

சும்மாட்டு கூடையிலே
சூரியனும் அடங்குதடா !!

உடை சுருங்கி போனாலும்
மனசுருக்கம் இல்லையடா !

தலையின் சுமையெல்லாம்
பூஞ்சிரிப்பாய் மறையுதடா!!

உன் பாதம்  சேர்ந்து வர
வாழ்க்கைதான் நீளுதடா !

 சின்னக்கை பிடிக்கயிலே
நம்பிக்கை வருகுதடா !

உன்
 சின்னக்கை பிடிக்கயிலே
நம்பிக்கை வருகுதடா !

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...