Friday, August 23, 2019

குறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்

பாடல் காட்சி 

 அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம்.
முதல் முறையா தலைவியை பார்த்துட்டு வர  தலைவன் தன் நெஞ்சத்திற்கு சொல்லியது இந்தப் பாட்டு
இயற்கைப் புணர்ச்சி  - கண்டதும் காதல்   love at first sight



இப்படலை எழுதியவர் : பரணர்

இவர்  பாடிய 85 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன ,  இவரது பாடல்களில்  வரலாற்று செய்திகள் அதிகம் இடம் பெற்று இருப்பதால் வரை , தமிழின் முதல் வரலாற்று கவிஞர் என்றும் சொல்கிறார்கள் . இவரும் கபிலரும் நண்பர்கள் என்றும் , குறிஞ்சி எப்படி கபிலரின் சிறப்போ , அதே மாதிரி மருத நிலப் பாடல்கள் இவரின் சிறப்பாக இருக்கிறது


விளக்கம்

இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.


இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு - பொருளில்லாத  வறியவன்

  இன்பத்தை விரும்பினாள்போல

அரிது வேட்டனையால்-நெஞ்சே - பெறுதற்கரியதை நீ  விரும்பிட்டியே நெஞ்சே

காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு   - அவ நல்லவள் , நமக்கு நன்மை தருவாள்னு தெரிஞ்ச உனக்கு

அரியள் ஆகுதல் அறியாதோயே  -     அரியவள் என்பது தெரியலியே

 ; உன் இஷ்டத்துக்கு எல்லாம் அவளை பார்க்க முடியாது அப்படிங்கிறது தெரியாம போயிருச்சே  னு சொல்லுறது தான் இந்தப்பாட்டு

இப்ப பாட்டை மறுபடியும் பாக்கலாம்

இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.




No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...