Tuesday, July 16, 2019

கவியரங்க அழைப்பு

மிசிகனில்  கவிஞர்  சல்மா  அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் (ஜூலை 20  2019 ) கவியரங்கத்துக்கு , பெண்ணியம்  சார்ந்த கவிதைகளை கேட்டு , மிச்சிகன் மக்களை கலந்து கொள்ள சொல்வதற்காக எழுதியது

மிச்சிகன் வாழ் தமிழர்களே !!!
கோடையின் தகிப்பதனை
தமிழிட்டு குறைத்திடவே !
தமிழ்சங்கம் நடத்திடுதே !
கவியரங்க நிகழ்ச்சி ஒன்று !
"கவிஞர் சல்மா" வின்
தலைமைதனில் !
டிராய் நகரிலே
சூலைத் திங்கள் 20 ம் நாள்
மாலை  5 மணி முதல் 7  மணி வரை
பொங்கி வரும் தமிழை
கேட்டு மகிழ வாருங்கள் !

சிந்தனையை செப்பனிட
செவிகளுக்கு விருந்தளிக்க
கவிப்புலமையை பறைசாற்ற
இதோ
முத்தான மூன்று தலைப்புகள்

1 . நெஞ்சு பொறுக்குதில்லையே !
2 .கர்வம்  ஓங்கி வளருதடி !
3 . அமிழ்தில் இனியதடி!

பெண்ணியம் கருப்பொருள் !
பெண்களுக்கே முன்னுரிமை !
இணைப்பைச் சுட்டி
பதிந்துடுவீர்
தேர்ந்தெடுத்த தலைப்புதனை !
அனைவரும் வாரீர்!
அனுமதி இலவசம்!!!

                                             -பாவி

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...