Tuesday, July 23, 2019

குறுந்தொகை பாடல் 18

பாடல் :

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே!

பாடல் காட்சி  :

இரவுக் குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது. -  தலைவியை சந்தித்து விட்டு கிளம்பும்  தலைவனை எதிர்கொண்டு தோழி சொல்வதாக இந்தப் பாடல் இருக்கிறது 

இப்பாடலை  எழுதியவர் :

 கபிலர் , 235 பாடல்கள் எழுதிய அவரை பற்றி அறிமுகம் தேவையில்லை  , அதனால விளக்கம்

விளக்கம் 

தோழி என்ன  சொல்றங்கனா

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட - 

வேரல் வேலி - சிறு மூங்கிலாகிய வாழ் வேலியை உடைய,
வேர்க்கோட் பலவின்- வேரிலே பழக்குலைகளை உடைய பலா மரங்கள் நிரம்பிய 
சாரல் நாட - பக்கத்து மலையில் உள்ள நாட்டுல இருப்பவனே

சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு - பலா மரத்தின் சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்கியதைப்  போல

இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே -  தலைவியின் உயிர் சிறியது , ஆசையோ மிகப் பெரியது ,


யார் அஃது அறிந்திசினோரே -     இப்படி இருக்கிற நிலையை  அறிந்தவர் யார் ? 

இப்படி தலைவியின் நிலையை  எடுத்துக் கூறி

செவ்வியை ஆகுமதி!  -     சீக்கிரம் கல்யாணம் பண்ணுறதுக்கு ஒரு வழியப் பாருன்னு சொல்லுவதாக இந்தப் பாடல் இருக்கிறது செவ்வியை - வரைந்து (மணம் செய்துகொள்ளும்) கொள்ளும் காலத்தை,
ஆகுமதி - உண்டாக்கு

இதுல இரண்டு சாரல் வருகிறது ,  தலைவினின் மலையில்  பலாப்பழம் வேரிலே இருக்கிறது  அதுக்கு காவலாய்  மூங்கில்  வேலி இருக்கிறது  அதனால தலைவியின் மலையில் சிறிய கொம்பிலே தொங்கும் பெரிய பழத்தினால் கொம்பு தாங்கும் வலியை புரிந்துகொள்ள உன்னால் முடியாது ,  தலைவியை மணம் புரிந்துகொள் என்று சொல்வதாக பொருள் வருகிறது .

இந்த ரெண்டாவது பாடலில் , மற்ற பாடல்களிலும்  கூட நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் , இயற்கையை எவ்வளவு  தூரம்  அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதும் , அதனோடு வாழ்க்கையை  பிணைத்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் தான்  சங்கப்  பாடல்களின் உதாரணம் இயற்கையாகவே இருக்கிறது . . நாம்தான் இயற்கையில் இருந்து மிகவும் விலகி வந்துவிட்டோம் ,

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...