Monday, December 18, 2017

தமிழ் இருகைக்காக மிச்சிகன் நிதி திரட்டும் கூட்டத்தில் எனது உரை !!!

திரைகடல் ஓடி  திரவியம்  தேடிய  தமிழ்  இனத்தின் முதல் குடியேற்றம் வாணிபத்தால் வந்தது ,சீனத்துடனும், கிரேக்கத்துடனும் நமக்கு முன் தோன்றிய மூத்த குடி வணிக தொடர்ப்பு  கொண்டிருந்தனர் .

பின்  காலனி ஆதிக்கத்தின்   நிர்பந்தத்தால் கடின வேலை செய்வதற்காக   மலேஷியா , சிங்கப்பூர் , மியான்மர் , மொரிசியஸ் , தென் ஆப்பிரிக்கா , பிஜி  போன்ற ன்டுகளிலும் , தீவுகளிலும்  குடி அமர்த்தப்பட்டோம்  . உலகமயமாக்கலின்  தாக்கத்தால்  இரண்டாம்  பெருங்  குடியேற்றம் நமது கல்வியால் வந்தது , தமிழ் என்னும் இனத்தின் அறிவும் , கல்வியும் , இன்று உலகம் முழுவதும் நாம் பரந்து விரிய காரணமாய் இருந்தது .  

வாணிபத்தால் பயணிக்க ஆரம்பித்து , கல்வியால் நாம் பரவியுள்ளோம் , நாம் இப்படி இருக்க இது மட்டும் தான் காரணமா ? இல்லை  இதற்கு மூல காரணம் நமது மொழி , அது கற்றுக்கொடுத்த பண்பாடு , நம் இலக்கியங்களில் உள்ள வாழ்வியல் . பிறப்பொக்கும் எல்லா  உயிர்க்கும் என்பதை  நாம் வாழ்ந்தல்லவா காட்டி உள்ளோம் . 

எப்படி வாழ்வது என்பதை அறியாமல் அறிவியல் படித்து , உயிரியில் படித்து  , கணிதம்  படித்து அல்லது கணினி தான் படித்து என்ன பயன் , திருக்குறளை படித்தால் தானே வாழ்க்கைக்கான படிப்பு கிடைக்கும் ?

நாம் பள்ளியில் பாடமாக படித்தது , நம்மில் பலருக்கு பள்ளிப்படிப்பு முடிந்ததும் தமிழ் படிப்பதும்  முடிந்து விடுகிறது அல்லது  கணினி , கைபேசியில் உள்ள செயலிகலில் வரும் தரவுகளை படிப்பது என்று சுருங்கி விடுகிறது .

அது மட்டும் தான் தமிழ் ஆ ? தமிழா ?

எழுத்தசை , சீர்தளை , அடி தொடை  என வரைமுறை கொண்டு , எழுத்துக்கும் , சொல்லுக்கும் , பொருளுக்கும் , மட்டுமல்லாது ஒரு பாடலை எழுதுவதற்கு யாப்பு , அதில் சுவையை  சேர்ப்பதற்கு அணி  என இலக்கணம் கொண்டு,    ஒரு சிறு புள்ளிக்கும் மாத்திரை அளவு கொண்டு உள்ளது நமது தமிழ் . இந்த அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இம்மை அளவும் பிசகாமல் படைக்கப்பற்ற சங்க இலக்கிய நூல்கள் நமது மொழியில் உள்ளன . நேரம் எடுத்து எந்த பாடலை வேண்டுமானாலும் அளவிட்டு பாருங்கள் . வியப்பில் இருந்து மீள வெகு நேரம் பிடிக்கும் .

 இதனை நாம் கற்கவும் அதற்கும் பெருமை செய்யவும் வேண்டாமா .???



காலங்கள் மாற  மாற நமது மொழியும்  மாறுதலுக்கு உட்பட்டுள்ளது  ,  பிராமிய  எழுத்து , வட்டெழுத்தாக மற்றம் பெற்றது , பின்    வட்டெழுத்தாக இருந்தது  பல்லவர் காலத்தில்  மாறுதலுக்கு உடப்பட்டு  கிரந்த எழுத்துக்களை சேர்த்துக் கொண்டது   அவை எழுத்து சீர்திருத்தம்  பெற்று   தற்கால தமிழ் எழுத்துக்களாகின , இப்படி தலை முறை தலை முறையாக தமிழ்  மாற்றம் பெற்று , பல்வேறு பரிமாணங்களை  அடைந்துள்ளது . 


கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் காகிதத்தில் இருந்து கணினிக்கு வந்து இப்போது சங்க இலக்கியமும் கணினியில் கற்கிறோம்.



தமிழின் மீது  நமக்கு முன்னாள் இருந்த தமிழர்களின்   தேடல் , ஆர்வம் , வேட்கை நம்மை இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது . இது அடுத்த பரிணாமத்துக்கு  கொண்டு   செல்லும் கடமை இப்போது நமக்கு உள்ளது. .


புலம் பெயர்ந்து , பல காலம் ஆயிற்று , எனது பிள்ளைகள் தமிழ்நாட்டையே வரைபடத்தில் தான் பார்த்திருக்கின்றனர் , எதுக்கு அடுத்த பரிமாணம் , அவர்கள் தமிழை படிப்பார்களா  என்றெல்லாம் கவலை நமக்கு  வேண்டியவதில்ல்லை ,


 ஏனெனில்  ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ் நமக்கு வசப்படுகிறதோ இல்லையோ , தமிழர்களாகிய நாம் தமிழுக்கு வசப்படுகிறோம் , நம் அடுத்த தலைமுறையில் மட்டும் அது நிற்கவா  போகிறது ?   நாம் அல்லவா   மேலும் செம்மையாக அவர்கள்  கற்க  அடித்தளம் அமைக்க வேண்டும் ? 

தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்லும் நிலை மாறி  தமிழ் படி எப்படி வாழ்வது என்று தெரியும் , தமிழ் படி உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றலாம் , தமிழ் படி  பிற நாட்டு   மக்கள் தமிழை விருப்ப பாடமாக படிக்கின்றனர்  , தமிழ் படி , கற்ற கல்வியும் , பெற்ற செல்வமும் , சுற்றமும் , சூழலும் மேம்படும்  என்று சொல்லும் நிலை வர வேண்டுமல்லவா ?

இதனை நோக்கி நம் தமிழ் சமூகம் பயணப்பட பாதை அமைத்து கொடுக்கும் ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் தமிழ் இருக்கை பற்றி அறிந்து கொள்ளவும் , அதற்கு மிச்சிகன் வாழ் தமிழர்களின் , மிச்சிகன்  தமிழ் சங்கத்தின்  முயற்சியையும்  வாருங்கள் நண்பர்களே தெரிந்து கொள்ளுவோம் .

நன்றி வணக்கம் !!!
https://youtu.be/rI8CDfwsx_Y

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...