பெங்களூர் - fridge ல் வைத்த ஆப்பிள் போல எப்பொழுதும் பெண்கள் புதுசாக இருக்கும் ஊர் . அதுவும் ஜோதி நிவாஸ் காலேஜ் அருகில் சென்று விட்டால் கால நேரம் தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் . இனி காலேஜ் பக்கம் போனால் ப்ரொஜெக்டில் இருந்து நீக்கி விடுவேன் என்று அன்பு கட்டளை மேலதிகாரியிடம் இருந்து வந்த காரணத்தினால் வாழ்கை வறட்சியாக போய்கொண்டிருந்த கால கட்டம் .
அப்பொழுது ஜோதி நிவாசில் உள்ள அத்தனை அழகான பெண்களும் ஒரு உருவில் வந்தார்கள் புதிதாக சேர்ந்த பெண்ணின் வடிவில் . பெயர் கீர்த்தனா , பேரை சொல்லும் போதே ஒரு இசை கேட்கிறது அல்லவா? எனக்கு ஒரு இசை கச்சேரியே கேட்டது .
ஆந்திரா, உலகுக்கு தந்த தேவதை . ஆந்திரா பருப்பு சாதத்துக்கும் , கோங்கிறா சட்டினிக்கும் , பெண்களின் அழகுக்கும் எதோ சம்மந்தம் இருக்கிறது என்ற மிகப்பெரிய உண்மையை என்னை கண்டுபிடிக்கச் செய்து , என்னையும் ஒரு விஞ்ஞானி ஆக்கினாள்.
என் மேனேஜர் வாழ்கையில் செய்த ஒரே நல்ல காரியம் , அவளுக்கு பயிற்சி கொடுக்கும் படி என்னைப் பணித்தது . விளைவு ,எனக்கு அரைகுறையாக தெரிந்த வேலையும் சேர்த்து மறந்து போனது .
வானத்தில் உள்ள தேவதைகள் எல்லாம் கூட்டு முயற்சியாக என்னை சபித்த பொன்னாளில் கீழ்க்கண்டவை நடந்தது
கீர்த் , கீஈர்த் , கீஏஏஏஏஎர்த் கோபமாய் திரும்பி பார்த்தாள் , "வாட் யு வான்ட் ? "
அது தமிழ் அவள் அரைகுறையாக கற்றுகொண்டிருந்த சமயம், புரியாது என்ற தைரியத்தில் "நீதான் வேண்டுமென்றேன் ".
சற்றும் எதிர்பார்க்காத பதில் வந்தது "வென் யு வான்ட் ? "
அருகில் இருந்த தமிழ் தெரிந்த என் சக பணியாளர்கள் , உற்சாக கூச்சலில் கைதட்டி ,நடந்ததை படம் வரைந்து பாகம் குறித்து அவளுக்கு விளக்க ஆரம்பித்தார்கள் .
தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நேரம் இருக்கும் கைதியின் மனநிலையில் நான் பரிதாபமாக நின்று கொண்டிருந்தேன் .
கோபமும் , வெட்கமும் , போட்டிபோட அவர்கள் சொன்னதை கவனித்தவள் , குறுநகையுடன் அருகே வந்து காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டாள் "வென் யு வான்ட் ? "
மெலிதாய் தொடங்கிய கீர்த்தனா என்னும் இசை உடல் , மனம் முழுவதும் வியாபித்து பரவ ஆரம்பித்தது .
ஆந்திராவின் நிலப்பகுதியும் , மகேஷ் பாபுவும் , இலியானாவும் நெருங்கிய சொந்தம் ஆகிப்போனார்கள் . தெலுங்கனா பிரச்சனைக்காக சோறு தண்ணி இல்லாமல் கவலைப்பட ஆரம்பித்தேன் .
தமிழ் பேசும் போது கூட அநியாயமாக ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ஒரு "லு " சேர்த்துக்கொண்டேன் .
கவிதை போலத்தான் வாழ்கை போய்க்கொண்டிருந்தது
யாரும் அற்ற தனிமையில் , மிகவும் அந்தரங்கமான நிலையில் காதலுடன் , நான் கீர்த் என்று அழைக்கையில் என்ன "ஜனா" என்று அவள் கேட்கும் வரை .
பின் குறிப்பு : "ஜனா என் பெயர் அல்ல "
- பாவி
Subscribe to:
Post Comments (Atom)
நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger
சார்லி மங்கர் 99 வயதான இவர் Berkshire Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் . 383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...
-
கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் (1926 ம் ஆண்டு ) Geroge Samuel Johnson என்பவரால் எழுதப்பட்டது " Richest Man in Babylon "...
-
சார்லி மங்கர் 99 வயதான இவர் Berkshire Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் . 383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...
-
சண்டையிட்டு சமாதானாம் அடைந்து சமாதானத்தில் ஒரு சண்டையிட்டு இப்போது சண்டையிலா சமாதானத்திலா? "லூசு மாதிரி எப்ப பார்த்தாலும் ...
அன்புடையீர் தங்களின் வலைப்பதிவு மிகுந்த பரிசீலனைக்குப் பின், தரம்வாய்ந்த ஒன்று என்பதால் வலைச்சரம் தானியங்கி திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. தயையுடன் எமது இணையப்பட்டையை தங்களின் வலைத்தளத்தில் இணைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ReplyDeleteவலைச்சரத்துடன் தங்கள் பதிவுகள் சிறப்புற வாழ்த்துக்கள்.
இங்ஙனம்,
வலைச்சரம் நிர்வாகக் குழு.
i liked that end twist bro :-)
ReplyDelete:) thanx
ReplyDelete