Tuesday, September 21, 2010

மீனாட்சி !

" மீனாட்சி" - பிரம்மன் மிகுந்த சிரத்தை எடுத்து இவளை படைத்திருக்க வேண்டும் . அவ்வளவு அழகு .. ஒரு நினைப்பும் தோணாமல் சும்மா அவளை பார்த்துகொண்டே இருக்கலாம் .ஆனால் அவள் மதிக்க கூட மாட்டாள் என்பது வேறு விஷயம் . தேவதைகள் எங்களை ஆசிர்வதித்த ஒரு நல்ல நாளில் மிக மெலிதான புடவையில், அபாயகரமான வளைவுகள் தெளிவாக தெரிய , செல்லம் Classku வந்தாள் .
பெங்களூரின் குளிர் என்ன ஆனது என்றே தெரியவில்லை .வகுப்பு முழுவதும் சஹாரா பாலைவனம் போல உஷ்ணம் . கண்கள்ளுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் .... சரி வேண்டாம் விடுங்கள் . அந்த கணத்தில் நம்மால் முடிந்தது ...

உணர்வுகள் இழந்து
உறவுகள் மறந்து
மரணப் படுக்கையில்
இருந்தாலும்
மறவாதடி உன்
வாசம்!

மறக்க நினைத்து
உறக்கம் தொலைத்து
நினைத்து நினைத்து
தவிக்கின்றேன்
இயல்பாய் வந்து
அழகாய் சிரித்து
பிரிந்து செல்கிறாய்
அனுதினமும் !

பார்த்து பார்த்து
ரசித்து முடித்து
கட்டும் உன்
புடவை மடிப்பு
கசங்கவில்லை
கசங்கிபோனது
என் மனது !

கவலை மறக்க
கவனம் கவர
கற்பனை செய்து
கலைகிறேன் நான்
காட்சி தந்து
கண்களால் கொன்று
காக்க வைத்து
கட்டி இழுத்து
செல்கிறாய் நீ !

உலகத்தை சுருட்டி
கையில் வைத்து
இடுப்பில் சொருகும்
கடலடி நீ!
கடக்க முற்ப்பட்டு
ஆழம் தெரியாமல்
கவிழ்ந்து போன
கப்பல் நான்!

கவிழும் கப்பல்கள்
உனக்கு பழசு
கவிழ்ந்த எனக்கோ
கடலோ புதுசு !
மீள்வதற்கு வழி
என்னடி மீனாட்சி !
பதில்
சொல்லடி மீனாட்சி !

- பாவி

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...