மாயம் செய்தாள்!
மயக்கம் தந்தாள்!
கனவுகள் கொடுத்தாள்!
ஓர்
காவியம் நிகழ்த்தினாள்!
கண்களில் பேசினாள்!
கவிதையாய் வந்தாள்!
உணர்வினை கொதிக்கச்
செய்து
உயிரினை வதைத்தாள்!
வானவில்லாய் புருவம்
வளைத்து!
கன்னங்கள் வர்ணஜாலம்
காட்ட!
கிள்ளை மொழி
பேசினாள்!
அதில்
காலங்களை மறக்கடித்தாள்!
கோபப் பார்வையினில்!
தெவிட்டாத அன்பினில்!
ரோஜா இதழ்களில்!
சிறு சிறு ஊடலில்!
செல்ல அணைப்பினில்!
கள்ளச் சிரிப்பினில்!
சூரியனும் சந்திரனும்!
கடல்களும் மலைகளும்!
வயல்வெளிகளும்!
பள்ளத்தாக்குகளும்!
பாலைவனங்களும்!
பனி பிரதேசங்களும்!
உருவாக்கி காட்டினாள்!
அவள் மட்டும்
கொண்ட எனக்கான
உலகம் படைத்தாள்!
அனைத்தும் செய்துவிட்டு
விலகி நின்று
தலை சாய்த்து
அப்பாவியாய் கேட்டாள்!
காதல்னா என்னடா ?
-- பாவி
Subscribe to:
Post Comments (Atom)
நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger
சார்லி மங்கர் 99 வயதான இவர் Berkshire Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் . 383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...
-
சார்லி மங்கர் 99 வயதான இவர் Berkshire Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் . 383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...
-
கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் (1926 ம் ஆண்டு ) Geroge Samuel Johnson என்பவரால் எழுதப்பட்டது " Richest Man in Babylon "...
-
முடி வெட்டிக்கொள்வது என்பது நினைவு தெரிந்த நாளில் இருந்தே இருக்கும் ஒரு அருமையான அனுபவம் . பெரும்பாலும் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் இ...
No comments:
Post a Comment