Saturday, May 29, 2010

காதல் தருணங்கள் -1

மாயம் செய்தாள்!
மயக்கம் தந்தாள்!
கனவுகள் கொடுத்தாள்!
ஓர்
காவியம் நிகழ்த்தினாள்!
கண்களில் பேசினாள்!
கவிதையாய் வந்தாள்!
உணர்வினை கொதிக்கச்
செய்து
உயிரினை வதைத்தாள்!
வானவில்லாய் புருவம்
வளைத்து!
கன்னங்கள் வர்ணஜாலம்
காட்ட!
கிள்ளை மொழி
பேசினாள்!
அதில்
காலங்களை மறக்கடித்தாள்!

கோபப் பார்வையினில்!
தெவிட்டாத அன்பினில்!
ரோஜா இதழ்களில்!
சிறு சிறு ஊடலில்!
செல்ல அணைப்பினில்!
கள்ளச் சிரிப்பினில்!
சூரியனும் சந்திரனும்!
கடல்களும் மலைகளும்!
வயல்வெளிகளும்!
பள்ளத்தாக்குகளும்!
பாலைவனங்களும்!
பனி பிரதேசங்களும்!
உருவாக்கி காட்டினாள்!
அவள் மட்டும்
கொண்ட எனக்கான
உலகம் படைத்தாள்!


அனைத்தும் செய்துவிட்டு
விலகி நின்று
தலை சாய்த்து
அப்பாவியாய் கேட்டாள்!
காதல்னா என்னடா ?

-- பாவி

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...