பார்த்தால் கையெடுத்து கும்பிட தோன்றும் முகம் , போட்ட சுடிதார் கசங்கியோ , விலகியோ என்றுமே பார்த்தது இல்லை, கண்களில் எப்பொழுதும் ஒரு பயம் , பார்ப்பவரை சுண்டி இழுத்து ஆறுதல் சொல்ல வைக்கும் பயம் , நீண்ட கூந்தல் , குங்குமத்தை என்றுமே மறக்காத நெற்றி , பாலில் ரோஜா பூவை கலந்ததை போல நிறம் , கண்களுக்கு குளுமையான சுத்தமான தோற்றம் , நினைத்து இருக்குறேன் இவளை தவறாக நினைத்தால் சாமி கண்ணை குத்தும் . ஒரு வார்த்தையில் சொன்னால் தேவதை . பழக்கத்தால் கரைந்து , பார்த்து பார்த்து உருகி , சுண்டு விரலை பிடித்து கொண்டு வாழ்கை வாழ்ந்து விடலாம் என இருக்கையில் தெரிய வந்தது தேவதையின் மறுபக்கம் .
ஏய் !
சும்மாதான் !
என்ன பண்ணுற !
நான் முக்கியம் இல்லையா!
பேசமாட்டியா !
செல்லம்தானே!
எனக்கு ஒரு கதை சொல்லு !
நீதான் வேணும் !
அப்படித்தான்!
ஒரு முத்தம் கொடேன் !
எப்பவும் பக்கத்தில் இரு !
பயமா இருக்கு !
கை பிடிச்சுக்கோ!
போய் தூங்கு !
நானும் தூங்க போறேன் !
எனக்கானது என
பக்குவமாய்
சேர்த்து வைத்த
நியாபகங்களும் , வார்த்தைகளும் !
அதே இரவின்
பிற்பகுதியில்
வேறொருவனுக்கு
சொல்லக் கேட்டு !
யாருமில்லாத தனிமையில்
சுய பச்சாதாபம் மேலோங்க
அடக்க முற்படும்
கட்டுப்பாடு இல்லாமல்
பொங்கி வழிந்தது
துளி துளியாய்
துரோகம் !
- பாவி
Thursday, September 30, 2010
Tuesday, September 21, 2010
மீனாட்சி !
" மீனாட்சி" - பிரம்மன் மிகுந்த சிரத்தை எடுத்து இவளை படைத்திருக்க வேண்டும் . அவ்வளவு அழகு .. ஒரு நினைப்பும் தோணாமல் சும்மா அவளை பார்த்துகொண்டே இருக்கலாம் .ஆனால் அவள் மதிக்க கூட மாட்டாள் என்பது வேறு விஷயம் . தேவதைகள் எங்களை ஆசிர்வதித்த ஒரு நல்ல நாளில் மிக மெலிதான புடவையில், அபாயகரமான வளைவுகள் தெளிவாக தெரிய , செல்லம் Classku வந்தாள் .
பெங்களூரின் குளிர் என்ன ஆனது என்றே தெரியவில்லை .வகுப்பு முழுவதும் சஹாரா பாலைவனம் போல உஷ்ணம் . கண்கள்ளுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் .... சரி வேண்டாம் விடுங்கள் . அந்த கணத்தில் நம்மால் முடிந்தது ...
உணர்வுகள் இழந்து
உறவுகள் மறந்து
மரணப் படுக்கையில்
இருந்தாலும்
மறவாதடி உன்
வாசம்!
மறக்க நினைத்து
உறக்கம் தொலைத்து
நினைத்து நினைத்து
தவிக்கின்றேன்
இயல்பாய் வந்து
அழகாய் சிரித்து
பிரிந்து செல்கிறாய்
அனுதினமும் !
பார்த்து பார்த்து
ரசித்து முடித்து
கட்டும் உன்
புடவை மடிப்பு
கசங்கவில்லை
கசங்கிபோனது
என் மனது !
கவலை மறக்க
கவனம் கவர
கற்பனை செய்து
கலைகிறேன் நான்
காட்சி தந்து
கண்களால் கொன்று
காக்க வைத்து
கட்டி இழுத்து
செல்கிறாய் நீ !
உலகத்தை சுருட்டி
கையில் வைத்து
இடுப்பில் சொருகும்
கடலடி நீ!
கடக்க முற்ப்பட்டு
ஆழம் தெரியாமல்
கவிழ்ந்து போன
கப்பல் நான்!
கவிழும் கப்பல்கள்
உனக்கு பழசு
கவிழ்ந்த எனக்கோ
கடலோ புதுசு !
மீள்வதற்கு வழி
என்னடி மீனாட்சி !
பதில்
சொல்லடி மீனாட்சி !
- பாவி
பெங்களூரின் குளிர் என்ன ஆனது என்றே தெரியவில்லை .வகுப்பு முழுவதும் சஹாரா பாலைவனம் போல உஷ்ணம் . கண்கள்ளுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் .... சரி வேண்டாம் விடுங்கள் . அந்த கணத்தில் நம்மால் முடிந்தது ...
உணர்வுகள் இழந்து
உறவுகள் மறந்து
மரணப் படுக்கையில்
இருந்தாலும்
மறவாதடி உன்
வாசம்!
மறக்க நினைத்து
உறக்கம் தொலைத்து
நினைத்து நினைத்து
தவிக்கின்றேன்
இயல்பாய் வந்து
அழகாய் சிரித்து
பிரிந்து செல்கிறாய்
அனுதினமும் !
பார்த்து பார்த்து
ரசித்து முடித்து
கட்டும் உன்
புடவை மடிப்பு
கசங்கவில்லை
கசங்கிபோனது
என் மனது !
கவலை மறக்க
கவனம் கவர
கற்பனை செய்து
கலைகிறேன் நான்
காட்சி தந்து
கண்களால் கொன்று
காக்க வைத்து
கட்டி இழுத்து
செல்கிறாய் நீ !
உலகத்தை சுருட்டி
கையில் வைத்து
இடுப்பில் சொருகும்
கடலடி நீ!
கடக்க முற்ப்பட்டு
ஆழம் தெரியாமல்
கவிழ்ந்து போன
கப்பல் நான்!
கவிழும் கப்பல்கள்
உனக்கு பழசு
கவிழ்ந்த எனக்கோ
கடலோ புதுசு !
மீள்வதற்கு வழி
என்னடி மீனாட்சி !
பதில்
சொல்லடி மீனாட்சி !
- பாவி
Wednesday, July 14, 2010
காதல் தருணங்கள் - 3
மனம் முழுவதும்
உன் எண்ணங்கள்
சிலந்தியின் பின்னல்களாய் !
அலைபேசியின்
மறுபக்க உன்
மௌனம் மட்டுமே
போதும்
தொடர்பிலிருக்கிறோம்
என அமைதியடைய !
ம்!
சொல்லு!
என்ற உன்
வார்த்தைகளில்
ஓர் வாழ்கை
வாழ்கிறேன்
நான்!
சில நாட்களாக
தொடர்பில்லாத
தனிமை பொழுதுகளால்
பிளவுபடுகிறேன்
எண்ணங்களால்!
வெட்கம் விட்டு
அழைக்கவா?
தனிமையில்
அழுதிடவா?
- பாவி
உன் எண்ணங்கள்
சிலந்தியின் பின்னல்களாய் !
அலைபேசியின்
மறுபக்க உன்
மௌனம் மட்டுமே
போதும்
தொடர்பிலிருக்கிறோம்
என அமைதியடைய !
ம்!
சொல்லு!
என்ற உன்
வார்த்தைகளில்
ஓர் வாழ்கை
வாழ்கிறேன்
நான்!
சில நாட்களாக
தொடர்பில்லாத
தனிமை பொழுதுகளால்
பிளவுபடுகிறேன்
எண்ணங்களால்!
வெட்கம் விட்டு
அழைக்கவா?
தனிமையில்
அழுதிடவா?
- பாவி
Saturday, May 29, 2010
காதல் தருணங்கள் -1
மாயம் செய்தாள்!
மயக்கம் தந்தாள்!
கனவுகள் கொடுத்தாள்!
ஓர்
காவியம் நிகழ்த்தினாள்!
கண்களில் பேசினாள்!
கவிதையாய் வந்தாள்!
உணர்வினை கொதிக்கச்
செய்து
உயிரினை வதைத்தாள்!
வானவில்லாய் புருவம்
வளைத்து!
கன்னங்கள் வர்ணஜாலம்
காட்ட!
கிள்ளை மொழி
பேசினாள்!
அதில்
காலங்களை மறக்கடித்தாள்!
கோபப் பார்வையினில்!
தெவிட்டாத அன்பினில்!
ரோஜா இதழ்களில்!
சிறு சிறு ஊடலில்!
செல்ல அணைப்பினில்!
கள்ளச் சிரிப்பினில்!
சூரியனும் சந்திரனும்!
கடல்களும் மலைகளும்!
வயல்வெளிகளும்!
பள்ளத்தாக்குகளும்!
பாலைவனங்களும்!
பனி பிரதேசங்களும்!
உருவாக்கி காட்டினாள்!
அவள் மட்டும்
கொண்ட எனக்கான
உலகம் படைத்தாள்!
அனைத்தும் செய்துவிட்டு
விலகி நின்று
தலை சாய்த்து
அப்பாவியாய் கேட்டாள்!
காதல்னா என்னடா ?
-- பாவி
மயக்கம் தந்தாள்!
கனவுகள் கொடுத்தாள்!
ஓர்
காவியம் நிகழ்த்தினாள்!
கண்களில் பேசினாள்!
கவிதையாய் வந்தாள்!
உணர்வினை கொதிக்கச்
செய்து
உயிரினை வதைத்தாள்!
வானவில்லாய் புருவம்
வளைத்து!
கன்னங்கள் வர்ணஜாலம்
காட்ட!
கிள்ளை மொழி
பேசினாள்!
அதில்
காலங்களை மறக்கடித்தாள்!
கோபப் பார்வையினில்!
தெவிட்டாத அன்பினில்!
ரோஜா இதழ்களில்!
சிறு சிறு ஊடலில்!
செல்ல அணைப்பினில்!
கள்ளச் சிரிப்பினில்!
சூரியனும் சந்திரனும்!
கடல்களும் மலைகளும்!
வயல்வெளிகளும்!
பள்ளத்தாக்குகளும்!
பாலைவனங்களும்!
பனி பிரதேசங்களும்!
உருவாக்கி காட்டினாள்!
அவள் மட்டும்
கொண்ட எனக்கான
உலகம் படைத்தாள்!
அனைத்தும் செய்துவிட்டு
விலகி நின்று
தலை சாய்த்து
அப்பாவியாய் கேட்டாள்!
காதல்னா என்னடா ?
-- பாவி
Subscribe to:
Posts (Atom)
நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger
சார்லி மங்கர் 99 வயதான இவர் Berkshire Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் . 383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...
-
முடி வெட்டிக்கொள்வது என்பது நினைவு தெரிந்த நாளில் இருந்தே இருக்கும் ஒரு அருமையான அனுபவம் . பெரும்பாலும் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் இ...
-
பார்த்தால் கையெடுத்து கும்பிட தோன்றும் முகம் , போட்ட சுடிதார் கசங்கியோ , விலகியோ என்றுமே பார்த்தது இல்லை, கண்களில் எப்பொழுதும் ஒரு பயம் ,...
-
கலைந்து கிடக்கும் பொம்மைகளை பார்த்த வண்ணம் கலைந்து போகிறேன் மகள் வந்து எடுப்பாள் என பொம்மையாய் பிறப்பது பேரதிர்ஷ்டம் !!! ...
